Wednesday, January 14, 2015

எனக்கு “புலி முத்திரை” குத்தலாம்: ஆனால் நான் தமிழச்சி ... பாப் பாடகி மாயா அதிரடி பேட்டி !




சனல் 4 தொலைக்காட்சிக்கு, ஈழத் தமிழரான மற்றும் பிரித்தானியாவில் புகழ்பெற்ற பாப் பாடகியாக இருக்கும் மாயா அருள்பிரகாசம் பேட்டி ஒன்றை வழங்கியுள்ளார். இலங்கையில் ஜனாதிபதியின் முகம் மட்டுமே மாறியுள்ளது. ஆனால் சிங்களத்தின் இனவேற்றுமை அரசு மாறவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். ஒரு தடவை மகிந்த ராஜபக்ஷ, உங்களுக்கு பாட்டு தான் வரும். எனவே அதனை பாடிக்கொண்டு இருக்கலாம். வீணாக அரசியல் பேசவேண்டாம் என்று தெரிவித்தார். மேலும் உங்களை புலிகள் அனுதாபி என்று கூட வர்ணித்தார். அது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று, ஜொனத்தன் மில்லர் கேட்டுள்ளார். இதற்கு பதில்கொடுத்த மாயா நான் ஒரு "தமிழச்சி" என்று கூறியுள்ளார்.

அப்படி என்றால் நான், எதனை ஆதரிப்பேன் என்று உங்களுக்கு தெரியாதா என்ன ? என்பதுபோல அவர் பதில் அமைந்திருந்தது. மிகவும் திறமையாக மற்றும் துணிச்சலாக அவர் தனது கருத்துக்களை முன்வைத்தார். முதலில் ராணுவத்தை அகற்றி, வட கிழக்கில் உள்ள காணிகளை மீள கையளித்தால், இந்த அரசாங்கத்தை கொஞ்சமாவது நம்பலாம் என்று அவர் கூறியுள்ளார். முக்கியமான மற்றும் சுருக்கமான பேட்டி இங்கே இருக்கிறது. மேலும் முழுமையான பேட்டியும் இங்கே இருக்கிறது. சனல் 4 TV இன் வீடியோக்கள் சில நாடுகளில் பார்க முடியாது. அதனால் அதனை யூரியூபில் அதிர்வின் வாசகர்களுக்காக ஏற்றியுள்ளோம். தொடர்ந்தும் அதிர்வின் செய்திகளோடு இணைந்திருங்கள்.

No comments:

Post a Comment