Sunday, December 05, 2010

10,000 ற்கும் மேற்பட்ட தமிழர்களால் லண்டனில் நடாத்தப்பட்ட மகிந்தவிற்கெதிரான போராட்டம்

போர்க்குற்றவாளியும், தமிழினப் படுகொலையின் சூத்திரதாரியுமான இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக நேற்றைய தினம் லண்டனில் பாரிய ஆர்ப்பாட்டத்தை நடாத்தினர்.

கொட்டும் பனியிலும் மக்கள் ஆயிரக்கணக்கில் ஒன்றுகூடி நடாத்திர எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தால் மகிந்த மட்டுமன்றி லண்டனே அதிர்ந்துபோனது.

காலை 10:00 மணிக்கு பிரித்தானிய தமிழ் இளையோரால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் மாலை 4:00 மணியளவில் ஆயிரக்கணக்கில் தமிழ்மக்களும் இணைந்து போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்தது.

உறைபனியிற்கும் மத்தியில் உறுதிதளராத மக்களாக ஒன்றுகூடிய பத்தாயிரத்திற்கும் (10,000) அதிகமான தமிழ் மக்களின் போராட்டத்தால் பீதியுற்ற மகிந்தவும் அவரது சகாக்களும் தமக்கு அதிகூடிய பாதுகாப்பை வழங்குமாறு பிரித்தானிய காவல்துறையினரை கேட்டுக்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment