முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் இறுதி நேரங்களில், நிராயுதபாணிகளாக நின்ற போராளிகளை இனம் கண்டு, அவர்களைக் கைது செய்து நிர்வாணமாக்கி கைகளைக் கட்டி பெண் போராளிகளைக் கற்பழித்தும், ஆண் போராளிகளை சுட்டும் வெட்டியும் பல வகைகளில் துன்புறுத்தி கொலை செய்து புதைத்த இலங்கை காட்டுமிராண்டி இராணுவத்தின் மானங்கெட்ட வரலாறுகளை உலகமே அறியும்.
Showing posts with label கட்டுரைகள். Show all posts
Showing posts with label கட்டுரைகள். Show all posts
Tuesday, May 19, 2015
சிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது!
முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் இறுதி நேரங்களில், நிராயுதபாணிகளாக நின்ற போராளிகளை இனம் கண்டு, அவர்களைக் கைது செய்து நிர்வாணமாக்கி கைகளைக் கட்டி பெண் போராளிகளைக் கற்பழித்தும், ஆண் போராளிகளை சுட்டும் வெட்டியும் பல வகைகளில் துன்புறுத்தி கொலை செய்து புதைத்த இலங்கை காட்டுமிராண்டி இராணுவத்தின் மானங்கெட்ட வரலாறுகளை உலகமே அறியும்.
Tuesday, May 12, 2015
வெல்லும் மொழி எது?
By
சா. கந்தசாமி
First Published : 12 May 2015 12:49 AM IST
ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால் ஐரோப்பிய நாட்டினர், புதிய நிலப் பகுதிகளையும், தங்கம், வெள்ளி, நறுமணப் பொருள்களையும் தேடிக் கடல் வழியாக மாலுமிகளையும், ஆள்களையும் அனுப்பினார்கள். அட்லாண்டிக், பசிபிக் சமுத்திரங்களிலும், இந்து மகா சமுத்திரத்திலும் பயணித்துப் புதிய நாடுகளைக் கண்டறிந்த அவர்கள் அவற்றைத் தன் நாட்டோடு சேர்த்துக் கொண்டார்கள். தங்கள் மொழியை புதிய நாடுகளின் தேசிய மொழியாக்கிவிட்டார்கள். அதனால், பல நாடுகளில் ஆதிமக்கள் மொழிகள் அழிந்து ஒழிந்துவிட்டன.
Saturday, May 09, 2015
தமிழ்த்தேசியத்தை அடகுவைத்து அரசியல் செய்யும் அனைவருக்கும் ஓர் எச்சரிக்கை!! - ஈழத்தமிழ் இளையோர் அமைப்பு
ஒரு
மாபெரும் இன அழிப்பு நடைபெற்ற காயங்கள் இன்னமும் ஆறவில்லை ஆனாலும் ஆறு
ஆண்டுகள் ஆகிவிட்டன நேற்று நடந்ததைப்போல நெஞ்சத்தில் அந்த நினைவுகள்
முட்களைப்போல நெருடிக்கொண்டிருக்கின்றன கண்ணைத்திறந்தாலும் மூடினாலும்
அவலங்களின் அந்த நாட்கள்
கண்ணைவிட்டு அகலாது கண்ணுக்குள்ளேயே ஓடிக்கொண்டிருக்கின்றன .
அபிவிருத்தி என்றும் நல்லாட்சி என்றும் கூறியபடி சிங்கள தேசத்தின் சிம்மாசனத்தில் புதியவர் ஒருவர் இப்போது அமர்ந்துகொண்டுள்ளார் ஆனாலும் தமிழர்களின் நிலை என்ன? இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ன?சிங்களதேசத்தின் கொடிய இனவெறி இரானுவத்தினால் படுகொலை செய்யப்பட்ட லட்சக்கனக்காண மக்களின் அழிவுக்கு நீதி கிடைக்குமா? வெள்ளிவிழா கண்டதமிழனின் இனவிடுதலைப்போராட்டம் நாளை என்னவாகும் ? தமிழினத்தின் தலைகள் நிமிருமா?அல்லது அவலங்கள் நீண்டுசெல்லுமா?
கண்ணைவிட்டு அகலாது கண்ணுக்குள்ளேயே ஓடிக்கொண்டிருக்கின்றன .
அபிவிருத்தி என்றும் நல்லாட்சி என்றும் கூறியபடி சிங்கள தேசத்தின் சிம்மாசனத்தில் புதியவர் ஒருவர் இப்போது அமர்ந்துகொண்டுள்ளார் ஆனாலும் தமிழர்களின் நிலை என்ன? இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ன?சிங்களதேசத்தின் கொடிய இனவெறி இரானுவத்தினால் படுகொலை செய்யப்பட்ட லட்சக்கனக்காண மக்களின் அழிவுக்கு நீதி கிடைக்குமா? வெள்ளிவிழா கண்டதமிழனின் இனவிடுதலைப்போராட்டம் நாளை என்னவாகும் ? தமிழினத்தின் தலைகள் நிமிருமா?அல்லது அவலங்கள் நீண்டுசெல்லுமா?
Wednesday, April 29, 2015
தமிழ் மொழியின் எழுத்தமைதி
தொல்காப்பியர் அகர முதல னகரம் இறுவாய் எழுத்துகள் முப்பது என்றும் (உயிர் - 12, புள்ளியிட்டு எழுதப்படும் மெய் -18), இவைதவிர, சார்ந்து வரும் புள்ளியிட்டு எழுதப்படும் ஆய்தம், குற்றியலுகரம், குற்றியலிகரம் ஆகிய மூன்று சார்பு எழுத்துகளையும் கூறியுள்ளார். சார்பெழுத்துகளுக்குப் புள்ளியிட்டு எழுதும் பழக்கம் 12-ஆம் நுற்றாண்டுக்கு முன்பே நின்றுவிட்டது. ஆக 31 எழுத்துகளே இன்று தமிழ் எழுத்துகள் ஆகின்றன.
நமக்குத் தெரியவரும் எல்லா மொழிச் சொற்களையும் வழக்கில் இருக்கும் தமிழ் எழுத்துகளைக் கொண்டு எழுத முடியும். தமிழ் எழுத்துகளின் இயல்பு, சொற்களின் அமைப்பு, தொடர் அமைப்பு, மொழியின் உயிர்நிலை புரியாதவரே ஜ ஷ ஸ ஹ க்ஷ என்னும் கிரந்த எழுத்துகளை ஏற்க விரும்புகிறார்கள்.
Monday, March 09, 2015
சர்வதேசத்தால் அழிக்கப்பட்ட தமிழர் சேனை! எம்மை அழித்தவனிடமே நீதி கேக்கும் அறியாமையின் அவல நிலையில் ஈழத் தமிழினம்.?
நமது செய்தியாளர்: தமிழீழத்திலிருந்து திலீபன் March 1, 2015.
மூன்று ஆண்டுகளில் எப்படி அழிந்து போனது??
இதன் பின்னால் கண்ணுக்கு தெரியாத சதி வலைகள் பின்னப்பட்டிருந்தது. முக்கியமாக மூன்று நாடுகளின் கரம் நீண்டிருந்தது அதை ஒவொன்றாக பார்ப்போம்.
Thursday, January 29, 2015
The Lanka question
That
he tried to woo both military and police chiefs to stay back even after
the defeat show. This shows how adroitly he led a democratic India up
to a garden path. Yet New Delhi should have known what
Kuldip Nayar
Kuldip Nayar is a veteran Indian journalist, human rights activist and a noted author.
Sharing
Saturday, January 24, 2015
ஆன்மா சாந்தியடையாது!
By ஆசிரியர்
First Published : 24 January 2015 02:54 AM IST
ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தமிழகத்தில் திராவிடக் கட்சிகளுடன் கைகோத்து மாணவர்களும் களத்தில் குதித்த நாள் 25, ஜனவரி 1965. அரை நூற்றாண்டு காலம் ஓடி முடிந்துவிட்டது. மொழிப்போர் தியாகிகளுக்காக கூட்டங்கள் நடத்தும் திராவிடக் கட்சிகள் மற்றும் தமிழ் அமைப்புகள், இந்த நாளை மிகப்பெரிய அளவில் விழாவெடுத்து கொண்டாட இருக்கின்றன.
ஹிந்தி எதிர்ப்பின் அடிப்படை நோக்கம், பல மொழிகளைக் கொண்டிருக்கும் இந்தியாவில் ஹிந்தி தேசிய மொழியாக அறிவிக்கப்பட்டால், ஹிந்தி கற்பது கட்டாயமாக்கப்பட்டால், எல்லா மாநிலங்களிலும் அவரவர் தாய்மொழியை அழித்தொழிக்கும் முயற்சியாக அது அமைந்துவிடும் என்பதுதான்.
Sunday, December 21, 2014
புலிகள் இந்தியாவிலும் தமிழீழம் கேட்கிறார்கள் எனக் கூறலாமா? ‘றோ’ ஆடும் பொய்க்கால் குதிரையாட்டம்!
இந்தியாவின் உளவுத்துறையான ‘றோ’ தாயகத் தமிழருடன் கடுமையான பகைமை கொண்டு செயற்படுகின்றது. அவர்களின் நாளாந்த வாழ்வைச் சிதைவுபடுத்துவதிலே ‘றோ’ தன் கவனத்தைப் பதித்துள்ளது.
இதற்கான பல ஆதரங்களை இங்கு நாம் முன்வைக்க முடியும். அதன் உச்சக்கட்டமாக 2009ம் ஆண்டு போரின்போது இடம்பெற்ற இனப்படுகொலையைக் குறிப்பிட முடியும். மிகப் பரவலான முறையில் அச்சமயம் தாயகத்தில் ‘றோ’வின் பிரசன்னம் காணப்பட்டுள்ளது. வெளிநாடுகளின் இந்திய ஊடுருவல்களை மிக இரகசியமாக அறிந்து இந்திய தேசிய பாதுகாப்பு அமைச்சுக்கு தகவல் கொடுப்பதே ‘றோ’வின் அதிமுக்கிய கடமையாகும். ஆனால் ‘றோ’ கடந்த பல ஆண்டு காலமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் செற்பாடுகள் குறித்தும் புலம்பெயர் தமிழர்களின் நடவடிக்கைகள் குறித்தும் ஆராய்ந்துவரும் நிறுவனமாக மாத்திரமே இயங்கி வருவது இங்கு குறிப்பிடக்கூடிய விடயமாகும்.
இதற்கான பல ஆதரங்களை இங்கு நாம் முன்வைக்க முடியும். அதன் உச்சக்கட்டமாக 2009ம் ஆண்டு போரின்போது இடம்பெற்ற இனப்படுகொலையைக் குறிப்பிட முடியும். மிகப் பரவலான முறையில் அச்சமயம் தாயகத்தில் ‘றோ’வின் பிரசன்னம் காணப்பட்டுள்ளது. வெளிநாடுகளின் இந்திய ஊடுருவல்களை மிக இரகசியமாக அறிந்து இந்திய தேசிய பாதுகாப்பு அமைச்சுக்கு தகவல் கொடுப்பதே ‘றோ’வின் அதிமுக்கிய கடமையாகும். ஆனால் ‘றோ’ கடந்த பல ஆண்டு காலமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் செற்பாடுகள் குறித்தும் புலம்பெயர் தமிழர்களின் நடவடிக்கைகள் குறித்தும் ஆராய்ந்துவரும் நிறுவனமாக மாத்திரமே இயங்கி வருவது இங்கு குறிப்பிடக்கூடிய விடயமாகும்.
Wednesday, June 04, 2014
மண்மகள் அறியா வண்ணச் சீரடி
By அ. வெண்ணிலா
First Published : 04 June 2014 01:44 AM IST
தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள இடம் மங்கலதேவிக் கோட்டம். தேனி மாவட்டம் கூடலூர் வண்ணாத்திப் பாறை காப்புகாடு வனப்பகுதியில் பளியன்குடியில் இருந்து ஆறாவது கிலோமீட்டரிலும், கேரளாவின் இடுக்கி மாவட்டம் தேக்கடியில் இருந்து பதினைந்தாவது கிலோமீட்டரிலும் அமைந்துள்ளது மங்கலதேவிக் கோவில். இதுவே கண்ணகிக் கோட்டம் என்று அழைக்கப்படுகிறது.
கி.பி.144ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் நாள் (கி.மு. சுப்ரமணியம் பிள்ளை கணிப்பின்படி) ஆடிமாத தேய்பிறையின் வெள்ளிக்கிழமையன்று மதுரையை எரித்த கண்ணகி பதினான்கு நாள்கள் நடந்துவந்து சேர்ந்த இடமே இந்த மங்கலதேவிக் கோட்டம்.
தலைவிரி கோலமாக அழுது வந்தவள் ஒரு வேங்கை மரத்தடியினில் நின்று தன் கணவனுடன் சேர வேண்டுகிறாள். அப்பொழுது அங்குப் புஷ்பக விமானத்தில் வந்த கோவலனுடன் கண்ணகி விண்ணுலகம் சென்றாள் என்று சிலப்பதிகாரம் சொல்லுகிறது.
Wednesday, May 07, 2014
கிணறு வெட்டுவோம்
ஆழ்குழாய் கிணறு என்ற பெயரில் பூமித்தாயின் உடல் முழுவதும் துளை போட்டுக் கொண்டிருக்கிறோம். இதனால்தான் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. சேமிப்பதைவிட சேமித்ததை பாதுகாப்பது மிக முக்கியம்.
நகரங்களில்தான் ஆழ்குழாய் கிணறுகள் அதிகரிக்கின்றன என்பதில்லை. கிராமங்களிலும் அதன் ஆக்டோபஸ் கரங்கள் ஆக்கிரமித்துள்ளன. இதற்கு அண்மைக்கால உதாரணம் தேனி மாவட்டம்.
Monday, April 28, 2014
வீரபாண்டிய கட்டபொம்மன்:இவர் தெலுங்கு மொழி பேசும் ராஜகம்பளம் நாயக்கர் இனத்தில் பிறந்தவர்.
அழகிய வீரபாண்டியபுரம் எனும் ஊரில் (இன்றைய ஒட்டபிடாரம்) ஆட்சிபுரிந்து வந்த ஜெகவீரபாண்டியனின் (நாயக்க வம்சம்) அவையில் அமைச்சராக பொம்மு என்கிற கெட்டி பொம்மு (தெலுங்கு) இடம்பெற்றிருந்தார். இவரது பூர்வீகம் ஆந்திர மாநிலம், பெல்லாரி ஆகும். வீரமிகுந்தவர் என்ற பொருளை தெலுங்கில் உணர்த்தும் கெட்டி பொம்மு எனும் சொல் நாளடைவில் கட்டபொம்மு என்று மாறி பின் தமிழில் கட்டபொம்மன் என்ற சொல்லாயிற்று. ஜெகவீரபாண்டியனின் மறைவிற்குப்பின் அரசகட்டிலில் ஏறிய கட்டபொம்மு பின் ஆதி கட்டபொம்மன் என்று மக்களால் அழைக்கப்பட்டார். இவரே பொம்மு மரபினரின் முதல் கட்டபொம்மன்.
இந்த பொம்மு மரபில் வந்தவர்களே (திக்குவிசய கட்டபொம்மன்) ஜெகவீர கட்டபொம்மன், ஆறுமகத்தம்மாள் தம்பதியர். இவர்களின் புதல்வரே வீரபாண்டியன் எனும் இயற்பெயர் கொண்ட வீரபாண்டிய கட்டபொம்மனாவார். இவர் நாயக்க வம்ச அரசாட்சியில் தொடர்ந்து வருவதால் இவர் பொம்மு நாயக்கர் என்று மக்களால் அழைக்கப்பட்டார்.
நெஞ்சம் நிறைந்த 4ம் ஆண்டு நினைவலைகள் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அப்பா!….
Wednesday, April 23, 2014
தை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு! சித்திரை முதல்நாள் சித்திரைப் புத்தாண்டு என்று கொண்டாடலாம்! நக்கீரன்
|
|
|
|
Tuesday, April 22, 2014
காப்போம் ஜனநாயகத்தை! சாய்ப்போம் சர்வாதிகாரத்தை!!
சுதந்திர இந்தியா பிரிட்டிஷ் நாடாளுமன்ற சனநாயக
முறையைப் பின்பற்ற வேண்டும் என நேருவும் மற்ற தலைவர்களும் முடிவு செய்தனர்.
சொத்துரிமை உடையவர்களுக்கே வாக்குரிமை என்ற நிலையை மாற்றி வயது வந்த
அனைவருக்கும் வாக்குரிமை வழங்க வேண்டுமென பிரதமர் நேரு விரும்பியபோது
கவர்னர் ஜெனரலாக இருந்த மவுண்ட் பேட்டன் திடுக்கிட்டார்.
600 ஆண்டுகள் பழமையான பிரிட்டிஷ் நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் வாக்குரிமை என்பது படிப்படியாகத்தான் கொடுக்கப்பட்டது. நீண்ட காலத்திற்கு பிறகே பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது. இவற்றை எல்லாம் சுட்டிக் காட்டிய மவுண்ட் பேட்டன் "பெரும்பாலும் படிப்பறிவற்ற இந்தியாவில் வாக்குரிமையின் அருமை தெரியாது தவறாகப் பயன்படுத்துவார்களானால் வேண்டாத விளைவுகள் ஏற்பட்டுவிடும். வேண்டாம் இந்த விஷப்பரீட்சை' என எச்சரித்தார்.
600 ஆண்டுகள் பழமையான பிரிட்டிஷ் நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் வாக்குரிமை என்பது படிப்படியாகத்தான் கொடுக்கப்பட்டது. நீண்ட காலத்திற்கு பிறகே பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது. இவற்றை எல்லாம் சுட்டிக் காட்டிய மவுண்ட் பேட்டன் "பெரும்பாலும் படிப்பறிவற்ற இந்தியாவில் வாக்குரிமையின் அருமை தெரியாது தவறாகப் பயன்படுத்துவார்களானால் வேண்டாத விளைவுகள் ஏற்பட்டுவிடும். வேண்டாம் இந்த விஷப்பரீட்சை' என எச்சரித்தார்.
Wednesday, April 02, 2014
அமெரிக்கா - இந்தியா - ஈழத்தமிழர்களின் அரசியல் : 01
இலங்கைப் பூனையைப் பார்த்து பயந்து நடுங்குகிறது இந்தியப் புலி – தினமணி ஆசிரியர் தலையங்கம்
12 நாடுகள் ஆதரிக்கவில்லை. 12 நாடுகள் புறக்கணித்தன. அவற்றில் இந்தியாவும் ஒன்று.
இலங்கைக்கு எதிராக இதற்கு முன் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களை பல நெருக்கடியான நிலைகளில் ஆதரித்த இந்தியா, எது எப்படியும் போகட்டும் என்ற மனோபாவத்தில் மேற்கொண்ட அலட்சியமான முடிவு இது.
இந்தப் புறக்கணிப்புக்காக இலங்கை அதிபர் ராஜபட்ச உளம் மகிழ்ந்து, பாராட்டி இருப்பதும், இதற்குப் பரிசாக 93 இந்திய மீனவர்களை விடுதலை செய்திருப்பதும், இந்தியாவை மேலும் கேலி செய்வதுதானே தவிர வேறு ஏதும் இல்லை.
Sunday, March 23, 2014
சிறிலங்கா வருகிறது 'பௌத்த தீவிரவாதத்தின் முகம்'
சிறிலங்காவில் உள்ள பௌத்த அடிப்படைவாத அமைப்பான, பொதுபல சேனாவின் அழைப்பின் பேரிலேயே விராது பிக்கு கொழும்பு வரவுள்ளார்.
'பௌத்த தீவிரவாதத்தின் முகம்' என்று 'ரைம்' சஞ்சிகையால் வர்ணிக்கப்பட்டவரே விராது பிக்கு.
அவரது ஒளிப்படம் தாங்கிய முகப்பு அட்டையுடன் வெளியான ரைம் சஞ்சிகையை சிறிலங்கா அரசாங்கம் தடைவிதித்தது குறிப்பிடத்தக்கது.
“நாம் அவரை அழைத்துள்ளோம். அவர் வரவுள்ளார். அவரை நாம் சந்திக்கவுள்ளோம்.
Thursday, February 13, 2014
கடந்து வந்த பாதையைத் திருப்பிப்பார்த்தல் - யதீந்திரா
எதிர்காலத்தை வரையறுக்க விரும்பினால் கடந்த காலத்தைப் படி – கன்பியுசியஸ்
2014ம் ஆண்டு வரவு-செலவுத்திட்டத்தின் வெளியுறவு அமைச்சுக்கான நிதியொதுக்கீடுகள் மீதான சூழ்நிலை விவாதத்தின்போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆற்றிய உரையின் மீதான ஒரு பிரதிபலிப்பாகவே, இக்கட்டுரை அமைகிறது.
Wednesday, October 23, 2013
நீங்கள் மீண்டும் வரவேண்டும்!-ச. வி. கிருபாகரன்
உலக
வரலாற்றில் நடைபெற்ற விடுதலைப் போராட்டங்கள் பல வெற்றி பெற்றன, சில
தோல்வியுற்றன, ஒரு சில அறவே அழிந்துள்ளன. ஆனால் வெற்றி, தோல்வி அற்ற
நிலையில் உலகில் தொடர்ந்தும் ஏதோ விதத்தில் ஆக்கிரமிப்பாளார்களான பௌத்த
சிங்களவர்களுக்கு தொல்லை கொடுப்பதானால் அது தமிழீழ விடுதலைப் போராட்டமே.
2009ம் ஆண்டு மே மாதம் வரை பெய்து ஓய்ந்த மழையில் பாதிக்கப்பட்டவர்கள்
குளிர்காய்பவர்கள், நெய் குடம் உடைந்தது நாய்க்கு வேட்டையென வாழ்பவர்கள்
பலர்.
மனநோய் வைத்தியசாலையில் முடிந்தவர்கள்
சிலர். எந்தவித வாழ்வாதாரமும் இன்றி வாழ்பவர், உயிருடன் இருக்கிறார்களா,
இல்லையா என ஏங்குபவர், இந்த வாரம் மாதம் வருடம் தன்னும் எம்மை விடுதலை
செய்வார்களா என காத்திருப்போர் பல ஆயிரம்.
சிறிலங்காவின் பாதுகாப்பு படைகளின் தடுப்பு
முகாம்கள் – கொலை களங்களாகவும், சித்திரவதை கற்பழிப்பு முகாம்களாகவும்
மாறியுள்ளன. தொடர்ந்து எழுதுவதானால் ஆயிரம் கதைகள் உண்டு. மிகச்சுருக்கமாக,
எமது தாயக பூமியில் அரசியலை தமிழ் தேசியக் கூட்டமைப்பும், புலமபெயர்
தேசத்தின் “அரசியல் சாம்பாரை”, “தமிழ்” என்ற கலப்புடன் ஆங்கில எழுத்தில் ஏ
(A) யிலிருந்து சற் (Z) வரையும், உட்பூசல் நிறைந்த பல அமைப்புக்கள்
திறமையாக குழப்புகின்றன.
Friday, April 05, 2013
மாணவர் போராட்ட வீச்சு ஒன்றுமட்டுமே உறங்கிக்கிடக்கும் ஊமைகளை தட்டியெழுப்பும் வல்லமை கொண்டவை.
சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியவற்றின் மிகப்பெரிய அழுத்தத்தின் பின் 2010,ல் ஐநா, செயலாளர் நாயகம் பான் கீ மூன். அவர்களால் உருவாக்கப்பட்டிருந்த, இலங்கையில் நடந்த யுத்த மீறல் விவரணங்கள் பற்றிய ஆராய்வு, தகுதிவாய்ந்த நிபுணர் குழுவினரால் கிட்டத்தட்ட ஒருவருடம் ஆராய்ந்து கண்டறிந்த தமது பூரணமான அறிக்கையை, ஐநா செயலாளர் நாயகம் பான் கீ மூன் அவர்களிடம் 2011, ஏப்ரல் மாதம் நிபுணர்கள் குழு கையளித்திருந்தது.
Subscribe to:
Posts (Atom)
