Wednesday, December 15, 2010

முன்னாள் இராணுவத்தினர் 50,000 பேர் கைது செய்யப்படவுள்ளனர்

இராணுவத்திலிருந்து தப்பியோடிய நபர்களுக்கு பல தடவைகள் பொதுமன்னிப்புக் காலம் அறிவிக்கப்பட்டிருந்தது. இக்காலத்தில் சரணடைந்து தமது பதவிகளை இராஜினாமா செய்யாமல் இன்னமும் 50,000 முன்னாள் சிப்பாய்கள் தலைமறைவாக இருப்பதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கிறது. எனவே இவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையானது மிக விரைவில் தொடங்கப்படவுள்ளதாகவும் அது அறிவித்துள்ளது.

இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களே நாட்டில் நடக்கும் பெரும்பாலான குற்றச்செயல்களைப் புரிந்து வருகிறார்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளதை அடுத்து, இந்த கண்டிப்பான முடிவை பாதுகாப்பு அமைச்சு எடுத்துள்ளதாம்.

இந்த வாரம் நகை அடகுக்கடை ஒன்றில் கொள்ளையடித்துச் சென்ற கும்பல் ஒன்று நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 போலீசார் பலியாகினர். பின்னர் நடத்திய தேடுதலில் 7 கொள்ளைக்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் 6 பேர் முன்னாள் இராணுவத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment