Friday, December 17, 2010

கனடாவில் இருந்து இருபது வருடங்களுக்கு பின் நாடு திரும்பிய தமிழர் சடலமாக மீட்பு!

கனடாவில் இருந்து இருபது வருடங்களுக்கு பின் நாடு திரும்பி வந்த யாழ்ப்பாணத் தமிழர் ஒருவர் கொழும்பில் கொட்டாஞ்சேனையில் தங்கி இருந்த வீட்டின் இரண்டாவது மாடியில் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டு உள்ளார்.

அ. சுரேஸ்குமார் (வயது-33) என்பவரே உயிர் இறந்தவர் ஆவார். இவர் ஐந்து நாட்களுக்கு முன்புதான் வந்து இருந்தார். இவரது மனைவி இந்தியாவில் உள்ளார். இது படுகொலையா? தற்கொலையா? என்கிற புலனாய்வு விசாரணைகளை கொட்டாஞ்சேனைப் பொலிஸ் நிலையப் பொலிஸார் முடுக்கி விட்டு உள்ளார்கள்

No comments:

Post a Comment