Sunday, December 19, 2010

இறுதி யுத்தத்தின் போது அரசாங்கத்தரப்பால் தவறிழைக்கப்பட்டது உண்மை


விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தின் போது அரசாங்கத் தரப்பில் தவறுகள் நிகழ்ந்தது உண்மையே என்று அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க ஏற்றுக் கொண்டுள்ளார்.
நேற்று நடைபெற்ற வைபவமொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது அரசாங்கத்தரப்பில் தவறுகளும், குறைபாடுகளும் நிகழ்ந்திருந்ததை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அதில் மறைப்பதற்கு எதுவுமில்லை என்றும் வலியுறுத்தியுள்ள அவர், ஜனாதிபதியின் லண்டன் பயணம் குறித்தும் கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.

லியாம் பொக்ஸ் ஒரு தடவை விமான நிலையம் வரை வந்திருந்த நிலையில் நாட்டுக்குள் அனுமதிக்கப்படாமல் திருப்பியனுப்பப்பட்டமைக்குப் பழிவாங்கும் முகமாகவே இம்முறை ஜனாதிபதியின் ஒக்ஸ்போர்ட் உரை ரத்துச் செய்யப்பட்டிருக்கலாம் என்றும் அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

அதனை மனதிற் கொண்டே அவர் இம்முறையும் தனது விஜயத்தை ரத்துச் செய்திருப்பதாக கருத வேண்டியுள்ளது என்றும் அமைச்சர் மேலும் சுட்டிக் காட்டுகின்றார்.

No comments:

Post a Comment