Saturday, April 06, 2013

இலங்கை உயர்ஸ்தானிகர் பற்றி தமிழக அரசியல்வாதிகள் வெளியிடும் கருத்துக்களில் உண்மையில்லை!

images[1]இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் பற்றி தமிழக அரசியலவாதிகள் வெளியிடும் கருத்தக்களில் உண்மையில்லை என இலங்கையின் அமைச்சர் அனுர பிரியதர்சன யாபா தெரிவித்துள்ளார்.
தமிழத்தைச் சேர்ந்த சில அரசியல்வாதிகள் இலங்கை உயர்ஸ்தானிகருக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் அனுபவம் நிறைந்த திறமை மிக்கவர்.
இதன் காரணமாகவே இந்தியாவிற்கான உயர்ஸ்தானிகராக அவரை நியமித்தோம்.
உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் எந்த சந்தர்ப்பத்திலும் பிழையான கருத்துக்களை வெளியிட மாட்டார்.
தமிழக கட்சிகளின் குற்றச்சாட்டுக்களை இந்திய மத்திய அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை என அனுர பிரியதர்சன யாபா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment