இலங்கைக் கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரன்னாகொடவை அரசாங்கத்தின் உயர் மட்ட விருப்பின் பேரில் இங்கிலாந்துக்கான இலங்கைத் தூதராக நியமித்த போதும், அதனை பிரிட்டன் ஏற்க மறுத்துள்ளதாக அறிய முடிகின்றது.
இறுதிக்கட்டப் போர் நிகழ்ந்த காலத்தில் வசந்த கரன்னாகொடவே கடற்படைக்குத் தலைமை தாங்கியிருந்தார். அதன் காரணமாகவே அவரும் போர்க்குற்றங்களில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் பிரிட்டன் அரசாங்கம் அவரது நியமனத்தை நிராகரித்துள்ளது.
பிரிட்டனிலுள்ள இலங்கைத் தமிழர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இராணுவத்தின் முக்கிய அதிகாரிகளின் போர்க்குற்ற விடயம் தொடர்பாக கிளர்ந்து எழுந்துள்ள நிலையில் அவற்றுடன் சம்பந்தப்பட்ட ஒருவரை தூதுவராக ஏற்றுக் கொள்வது வேண்டாத தலைவலியை உருவாக்கி விடும் என்று பிரித்தானிய அரசாங்கம் கருதுவதாக தெரிகின்றது.
ஆயினும் வசந்த கரன்னாகொடவின் நியமனத்தை நிராகரித்துள்ள செயலால் இலங்கை அரசாங்கம் பிரிட்டன் மீது கடும் ஆத்திரத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
No comments:
Post a Comment