புலம்பெயர் இலங்கை தமிழர்கள், வெளிநாட்டிலிருந்து கொண்டு இலங்கைக்கு எதிரான பிரச்சாரங்களை முன்னெடுப்பதை விடுத்து, நாட்டிற்கு வந்து உண்மையான சமாதான நிலையை தெரிந்துகொள்ள வேண்டுமென இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொழும்பு பம்பலப்பிட்டி இந்து கல்லூரியின் 60 வது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தில் கலந்து சிறப்பித்த ஜனாதிபதி, அங்கு தமிழிலும் உரையாற்றினார். அப்போது அவர் தெரிவிக்கையில்
இங்கு தொடர்ந்து தமிழில் உரையாற்றுகையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறியதாவது, நான் தமிழில் பேச விரும்புகிறேன். நீங்கள் சிரிக்காவிட்டால் தொடர்ந்து நான் பேசுவேன்.
இந்நாட்டிலுள்ள முக்கிய தமிழ் பாடசாலையொன்றின் வைர விழாவில் கலந்து கொள்வது மகிழ்ச்சியளிக்கின்றது. இங்கு கல்வி பயிலும் மாணவர்கள் பாக்கியவான்கள். வடக்கு கிழக்கிற்கு பின்னர் முதலாவது தமிழ் இந்து பாடசாலை இதுவாகும்.
அன்று பிள்ளையார் பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்டு இன்று பிள்ளையார் துணையோடு இந்துப் பாடசாலையாக மாறியிருக்கின்றது. இதற்காக பாடுபட்டவர்களை நாம் நினைவு கூற வேண்டும். ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர், சேர் பொன். இராமநாதன், சேர் பொன் அருணாச்சலம் ஆகியோர் இந்நாட்டுக்கு செய்த சேவைகள் அளப்பரியனவாகும்.
எனவே நீங்கள் ஒரு நாளும் நன்றி மறக்க வேண்டாம். உலகில் களவாட முடியாத ஒன்று உள்ளது. அதுதான் கல்வி. படித்தால் மட்டும் போதாது, ஒழுக்கமும் பண்பும் இருக்க வேண்டும். இது போன்று நாட்டிலும் சர்வதேசத்திலும் எமது பிள்ளைகள் நற்பெயர் எடுக்க வேண்டும்.
மாதா, பிதா, குரு தெய்வம் இவர்களை மறக்க வேண்டாம். உங்கள் தாய்நாட்டை மறக்க வேண்டாம். நாம் தாய் நாட்டுக்கு என்ன செய்ய வேண்டுமென்று சிந்தியுங்கள்.
புலம்பெயர்ந்த தமிழர்கள் இலங்கையை பற்றி பொய்யான பிழையான பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர். இவர்கள் இந்நாட்டுக்கு வந்து உண்மையான சமாதான நிலைமையை கண்டு கொள்ள வேண்டும். அதற்காக அழைப்பு விடுக்கின்றேன்.
அத்தோடு இங்கு பிறக்காதவர்களும் இங்கு ஒருபோதும் வராதவர்களும் பிழையான பிரச்சாரங்களை முன்னெடுக்கின்றனர். இங்கிருப்பது ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே நீதி, இப்பாடசாலை மென்மேலும் முன்னேற வாழ்த்துக்கள் என கூறினார்.
சிங்கள மொழியில் உரையாற்றுகையில்
வி.புலிகள் நிலைகொண்டிருந்த பயங்கரவாத காலப்பகுதியில், கோயில்களில், பள்ளிவாசல்களில், மத அனுஷ்ட்டானங்களை நடத்த முடியாத காலம் காணப்பட்டது. இன்று பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுள்ளது.
வரலாற்றில் நிகழ்ந்த பிழைகளை மீண்டும் மீண்டும் நினைவு கூராத எமது பிள்ளைகளின் மனதில் குரோதத்தையும், வைராக்கியத்தையும் ஏற்படுத்த முனைய கூடாது.
தமிழ் மக்களை போன்று நாமும், பரீட்சையின் போது பிள்ளையாரின் உதவியை நாடுவோம். எனவே இந்துக்களுக்கும், எமக்கும் இடையே ஒற்றுமை உண்டு. அதை பேணுவோம் என தெரிவித்தார்.
இதேவேளை, இந்நிகழ்வின் போது பாடசாலை புதிய கட்டிடத்துக்கான நுழைவாயிலையும் ஜனாதிபதி திரந்துவைத்தார். மேலும் திறம்பட செயற்பட்டு வரும் ஆசிரியர்களையும் அவர் கௌரவித்தார். இந்நிகழ்வில் அமைச்சர் பௌசி, நல்லை ஆதீனம், சம்மாங்கோட்டு பிள்ளையார் ஆலய பிரதம குரு ராமகிருஷ்ண மிஷன் சுவாமிகள் மற்றும் அகில இலங்கை இந்து மாமன்றத் தலைவர் கந்தையா நீலகண்டன், பாராளுமன்ற உறுப்பினர்களான அப்பாத்துரை விநாயகமூர்த்தி, பிரபõஷ் கணேஷன், விஜயகலா மகேஸ்வரன், சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கொழும்பு பம்பலப்பிட்டி இந்து கல்லூரியின் 60 வது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தில் கலந்து சிறப்பித்த ஜனாதிபதி, அங்கு தமிழிலும் உரையாற்றினார். அப்போது அவர் தெரிவிக்கையில்
இங்கு தொடர்ந்து தமிழில் உரையாற்றுகையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறியதாவது, நான் தமிழில் பேச விரும்புகிறேன். நீங்கள் சிரிக்காவிட்டால் தொடர்ந்து நான் பேசுவேன்.
இந்நாட்டிலுள்ள முக்கிய தமிழ் பாடசாலையொன்றின் வைர விழாவில் கலந்து கொள்வது மகிழ்ச்சியளிக்கின்றது. இங்கு கல்வி பயிலும் மாணவர்கள் பாக்கியவான்கள். வடக்கு கிழக்கிற்கு பின்னர் முதலாவது தமிழ் இந்து பாடசாலை இதுவாகும்.
அன்று பிள்ளையார் பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்டு இன்று பிள்ளையார் துணையோடு இந்துப் பாடசாலையாக மாறியிருக்கின்றது. இதற்காக பாடுபட்டவர்களை நாம் நினைவு கூற வேண்டும். ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர், சேர் பொன். இராமநாதன், சேர் பொன் அருணாச்சலம் ஆகியோர் இந்நாட்டுக்கு செய்த சேவைகள் அளப்பரியனவாகும்.
எனவே நீங்கள் ஒரு நாளும் நன்றி மறக்க வேண்டாம். உலகில் களவாட முடியாத ஒன்று உள்ளது. அதுதான் கல்வி. படித்தால் மட்டும் போதாது, ஒழுக்கமும் பண்பும் இருக்க வேண்டும். இது போன்று நாட்டிலும் சர்வதேசத்திலும் எமது பிள்ளைகள் நற்பெயர் எடுக்க வேண்டும்.
மாதா, பிதா, குரு தெய்வம் இவர்களை மறக்க வேண்டாம். உங்கள் தாய்நாட்டை மறக்க வேண்டாம். நாம் தாய் நாட்டுக்கு என்ன செய்ய வேண்டுமென்று சிந்தியுங்கள்.
புலம்பெயர்ந்த தமிழர்கள் இலங்கையை பற்றி பொய்யான பிழையான பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர். இவர்கள் இந்நாட்டுக்கு வந்து உண்மையான சமாதான நிலைமையை கண்டு கொள்ள வேண்டும். அதற்காக அழைப்பு விடுக்கின்றேன்.
அத்தோடு இங்கு பிறக்காதவர்களும் இங்கு ஒருபோதும் வராதவர்களும் பிழையான பிரச்சாரங்களை முன்னெடுக்கின்றனர். இங்கிருப்பது ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே நீதி, இப்பாடசாலை மென்மேலும் முன்னேற வாழ்த்துக்கள் என கூறினார்.
சிங்கள மொழியில் உரையாற்றுகையில்
வி.புலிகள் நிலைகொண்டிருந்த பயங்கரவாத காலப்பகுதியில், கோயில்களில், பள்ளிவாசல்களில், மத அனுஷ்ட்டானங்களை நடத்த முடியாத காலம் காணப்பட்டது. இன்று பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுள்ளது.
வரலாற்றில் நிகழ்ந்த பிழைகளை மீண்டும் மீண்டும் நினைவு கூராத எமது பிள்ளைகளின் மனதில் குரோதத்தையும், வைராக்கியத்தையும் ஏற்படுத்த முனைய கூடாது.
தமிழ் மக்களை போன்று நாமும், பரீட்சையின் போது பிள்ளையாரின் உதவியை நாடுவோம். எனவே இந்துக்களுக்கும், எமக்கும் இடையே ஒற்றுமை உண்டு. அதை பேணுவோம் என தெரிவித்தார்.
இதேவேளை, இந்நிகழ்வின் போது பாடசாலை புதிய கட்டிடத்துக்கான நுழைவாயிலையும் ஜனாதிபதி திரந்துவைத்தார். மேலும் திறம்பட செயற்பட்டு வரும் ஆசிரியர்களையும் அவர் கௌரவித்தார். இந்நிகழ்வில் அமைச்சர் பௌசி, நல்லை ஆதீனம், சம்மாங்கோட்டு பிள்ளையார் ஆலய பிரதம குரு ராமகிருஷ்ண மிஷன் சுவாமிகள் மற்றும் அகில இலங்கை இந்து மாமன்றத் தலைவர் கந்தையா நீலகண்டன், பாராளுமன்ற உறுப்பினர்களான அப்பாத்துரை விநாயகமூர்த்தி, பிரபõஷ் கணேஷன், விஜயகலா மகேஸ்வரன், சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment