Tuesday, October 08, 2013

மாத்தளை மனித எச்சங்கள் சீனாவிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது !


மாத்தளை வைத்தியசாலையில் பாரியளவில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டிருந்தன. இந்த மனித எலும்புக் கூடுகள் ஆய்வு நடாத்துவதற்காக சீன ஆய்வு கூடமொன்றுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. சடலங்கள் எப்போது புதைக்கப்பட்டன என்பது குறித்து ஆராய்வதற்காக இந்த மனித எச்சங்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளன என்கிறது இலங்கை அரசு.


ரேடியோ கார்பன் தொழில்நுட்பத்தின் ஊடாக இந்த மனித எச்சங்களை பகுப்பாய்வு செய்யவும், இதனூடாக இந்த எச்சங்கள் எக் காலப்பகுதியில் புதைக்கப்பட்டது என்பது தொடர்பாக அறியமுடியும் எனவும் கூறப்படுகிறது. மனித எச்சங்கள் 1986 –1990ம் ஆண்டு காலப்பகுதிக்கு உரித்தானது என இலங்கை ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இரண்டாம் கட்ட உறுதிப்படுத்தல்களுக்காக மனித எச்சங்கள் சீனாவிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. இதற்கான அனுமதியை நீதிமன்றம் வழங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

No comments:

Post a Comment