இலங்கை அரசாங்கம் 54 நாடுகளுக்கு அழைப்பு விடுத்த போதிலும் இதில் 12 நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் தொடர்பிலான அனுபவங்கள் ஏனைய நாடுகளுக்கு உதவியாக அமையும் என இலங்கை அறிவித்துள்ளது.
அமெரிக்கா, பிரித்தானியா, சுவிட்சர்லாந்து, அவுஸ்திரேலியா, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட சில நாடுகள் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை.
சீனா மற்றும் ரஸ்யா ஆகிய நாடுகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் நாடுகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
No comments:
Post a Comment